search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு மாடு முட்டி மூதாட்டி பலி"

    போடி அருகே தோட்டத்தில் காவலுக்காக சென்ற மூதாட்டி மீது காட்டுமாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    போடி:

    போடி அருகே முத்துக்கோம்பை பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய், தென்னை, இலவங்காய் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானை, மாடுகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கடந்த வாரம் யானை தாக்கியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் முத்துக்கோம்பையை சேர்ந்த மாயக்காள் (வயது75) என்பவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலுக்காக சென்றார். அப்போது அங்கு புகுந்த காட்டுமாடுகள் அவரை முட்டி தூக்கி எரிந்தது. இதில் படுகாயமடைந்த மாயாக்காள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளால் தொடர்ந்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×